Thursday, April 8, 2010

இளையராஜா புகார்! சி.டி., கடையில் ரெய்டு!!

இசையமைப்பளார் இளையராஜா கொடுத்த புகாரின்பேரில் சென்னையில் சி.டி., கடைகளில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினார்கள். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றையும் கொடுத்திருந்தார். தான் இசையமைத்த சினிமா பாடல்களின் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள் வெளியிட்டது தொடர்பாக தனக்கு கொடுக்க வேண்டிய ராயல்டி தொகையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் கொடுக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரை வழக்காக பதிவு செய்த போலீசார், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவி.எம். மியூசிக் சோன், சரஸ்வதி ஸ்டோர் ஆகிய கடைகளில் ‌திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு அனுமதி பெறாமல் இருந்த 179 சினிமா பாடல் சி.டி.,க்களை பறிமுதல் செய்திருப்பதாக கூறிய குற்றப்பிரிவு போலீசார், கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடத்தவிருப்பதாக கூறியுள்ளனர்.

92 லட்சம் போச்சே! கவலையில் கலகல சந்தானம்!!

தமிழ் சினிமா காமெடியில் தனக்கென தனி பாதையை உருவாக்கி வெற்றி பெற்றிருப்பவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய இவர்தான் இப்போது கோலிவுட்டின் பிஸி காமெடியன். ரசிகர்களை கலகலப்பூட்டும் சந்தானம் இப்போது கவலையில் இருக்கிறாராம். காரணம் வடிவேலுவை அழ வைத்த அதே நில மேட்டர்தான். மக்களை சிரிக்க வெச்சு சம்பாதித்த பணத்தில் வளசரவாக்கம் பகுதியில் நிலம் வாங்க முடிவு செய்த சந்தானம், அதற்காக ஒரு இடத்திற்கு ஒன்றை கோடி ரூபாய் ரேட் பேசி முடித்திருக்கிறார். முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுத்த சந்தானம், நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த பணத்திற்கு கையெழுத்து கூட வாங்கவில்லையாம். மீதத் தொகையுடன் ரிஜிஸ்தர் பண்ண போகும்போது நிலைமையை தலைகீழாகியிருக்கிறது. மூணுகோடிக்கு வேறு ஒரு பார்ட்டி நிலத்தை கேட்டதால், நில உரிமையாளர் சந்தானத்துக்கு நிலம் கிடையாது என்று கூறி விட்டாராம். சரி... அப்போ நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையையாவது திருப்பிக் கொடுங்கள் என சந்தானம் கேட்க, நிலம் விற்கும்போது பணத்தை கொடுக்கிறேன், என்று கூறி இழுத்தடிக்கிறாராம்.

இப்போது வளசரவாக்கம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர் உதவியுடன் பஞ்சாயத்து பேசி, கொடுத்த பணத்தை திருப்பி வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சந்தானம், அதற்காகவே பெரும் தொகையை செலவு செய்து கொண்டிருக்கிறாராம்.

நடிகர் ஷாமுக்கு 2வது பெண் குழந்தை பிறந்தது

நடிகர் ஷாம் - கஷீஸ் தம்பதியருக்கு பெங்களூருவில் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கிக் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தில்லாலங்கடி படத்தின் ‌ஜெயம் ரவியுடன் நடித்து வரும் ஷாமின் மனைவி கஷீஸ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று பெங்களூருவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஷாம் - கஷீஸ் தம்பதியருக்கு ஏற்கனவே ஸமைரா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவத்துக்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.

ரம்பா கழுத்தில் தாலி கட்டினார் இந்திரன்

நடிகை ரம்பா - தொழிலதிபர் இந்திரன் திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனக்கு திருமணம் கைகூடினால் திருப்பதியில் வைத்து திருமணத்தை நடத்துவதாக ரம்பா, ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டிருந்தாராம். அதன்படி ரம்பா - இந்திரன் திருமணம் திருப்பதியில் நடந்‌தது. ரம்பா காலை 11 மணியளவில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநிற பட்டுப்புடவை கட்டியபடி மணமேடைக்கு வந்தார். மணமகன் பட்டு வேஷ்டி - சட்டை அணிந்து மணமேடையில் இருந்தார். அப்போது நடிகை ரம்பாவின் கையை அவரது தந்தை வெங்கடேஸ்வரராவ் பிடித்து, மணமகன் இந்திரகுமாரிடம் ஒப்படைத்தார். ரம்பாவின் தாய் உஷாராணி அருகில் இருந்தார். அதைத்தொடர்ந்து ரம்பா, மணமகனுக்கு பாதபூஜை செய்து, காலை தொட்டு கும்பிட்டார். மதியம் 12.30 மணியளவில் ரம்பா கழுத்தில் இந்திரன் தாலி கட்டினார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர்.

‌கோலாகலமாக இதில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நடிகை ரோஜா, டைரக்டர் செல்வமணி, கலா மாஸ்டர், தெலுங்கு டைரக்டர் ராகவேந்திர ராவ் உள்ளிட்‌டோர் பங்கேற்றனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட ரம்பா, பின்னர் ஏழுமலையானை தரிசித்தார்.

நடிகை ரம்பா - இந்திரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11ம்தேதி நடைபெறுகிறது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
rambha wedding reception stills, rambha wedding pictures, tamil actress rambha marriage photos, rambha marriage engagement, ramba wedding photos, tamil actress ramba wedding photos, actress rambha wedding pics, rambha wedding reception images, rambha wedding reception wallpapers
Ramba Wedding Photos, Rambha Wedding Pictures, Rambha Marriage Photos

அரசியலுக்கு வருவது எப்போது? மீண்டும் விஜய் பரபரப்பு!!

அரசியலுக்கு வர என்னை நானே தயார் படுத்தி வருகிறேன். மக்கள் விரும்பும்போது அரசியல் களத்தில் குதிப்பேன் என்று நடிகர் விஜய் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். காவல்காரன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் அதிரடி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நான் மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. என் ரசிகர்கள் கம்ப்யூட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

'உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன். பொதுவாக நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் என கருதுபவன் நான். அரசியல் என்பது ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார் படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான். மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர்-தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக அளவு சிக்கியிருக்கும் விஜய், அவ்வப்போது அரசியல் குறித்து பேசுவதும், அதன் பின்னர் பின்வாங்குவதும் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியதன் மூலம் தமிழக அரசியலிலும் பரபரப்பு கிளம்பியது. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார், இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் போகிறார் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த சமயத்தில் தமிழகத்திற்கு வந்திருந்த ராகுலும், விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி என்று செய்திகள் வெளியாயின. அதேநேரம் விஜய் காங்கிரசில் சேர்ந்தால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் தீர்மானம் போட்டன. இதையடுத்து விஜய் அளித்த பேட்டியில், நான் ராகுலை சந்தித்து பேசியது உண்மைதான். அவர் எனது நண்பர். எனது மக்கள் இயக்கம் பற்றியும், அரசியல் குறித்தும் பேசினோம் என்றும், பிற்காலத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் கூறினார். இந்நிலையில் இப்போது மீண்டும் தனது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Rambha Marriage Photos

Dish TV’s surprising gift for sports lovers

The year 2010 is gonna be really a great year for all sports lovers. It had never happened before with so many global sports events happening at the same time. We have IPL, T-20 World Cup, FIFA World Cup, ICC World Cup in India along with Champions League and Common Wealth Games as well.

But for those who are connected with various DTH services, it’s a sort of extreme disorder as the sport channels are offered at extremely higher prices. But for Dish TV subscribers, here’s something more elating as these channels can be availed at the cheaper rates.

Says Mr. Krishna Kumar, Deputy Vice President, Sales, Dish TV: “Marking the celebrations of owning 7 million subscribers, Dish TV is pleased to announce a special offer all the existing customers wherein they get 4 months worth of subscription by paying recharge for 3 months.

Turing more lights on this offer, Salil Kapoor added that all the sports channels telecasting those respective events can be obtained at Rs. 125 per month along with South Silver Saver and South Gold Saver packages.

South Silver Saver is where you have to pay Rs. 450 and get Rs.600 with return of 33% and South Gold Saver is about paying Rs.800 with a return of 33% that’s Rs. 1064 on the dot.

The sports Channel packages include – ESPN STAR SPORTS, STAR CRICKET, DD SPORTS, TEN SPORTS, ZEE SPORTS….

Here’s a small comparison between various DTH services charging for this package…

AIRTEL – Rs. 182
Tata Sky – Rs. 210
Big TV – Rs. 215
Videocon – Rs. 240
Sun Direct – Rs. 252
DISH TV – Rs. 125